தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை இரண்டு வாரமும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி சார்பில், கண்தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மனித சங்கிலி கே.கே.நகர் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவமனை தலைமை இயக்குனர் மருத்துவர் ராமலிங்கம், பள்ளியின் தாளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கண்தானம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *