திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் . இந்நிகழ்வில் , மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், அலுவலக மேலாளர்கள் சிவசுப்ரமணியம்பிள்ளை, ( பொது ), தமிழ்கனி ( குற்றவியல் ) பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் உறுதிமொழியாக :- நான் சாதி, இன, வட்டார , மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி , இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் , எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *