நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி கே.கே நகர் உழவர் சந்தையில் தானியங்களைக் கொண்டு திருச்சி மலைக்கோட்டை மற்றும் வாக்குப்பதிவு குறித்த அடையாளங்களை குறித்து உருவாக்கப்பட்ட தேர்தல் லட்சியை (லோகோ) திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி ஆர்டிஓ அருண் விழிப்புணர்வு லோகோவை திறந்து வைத்தார், இதில் வேளாண்துறை இணை இயக்குனர் சக்திவேல், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பு அலுவலர் வேலுமணி, வேளாண்துறை (PA) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், வேளாண்துறை துணை இயக்குனர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்று தவறாது ஜனநாயக கடமையாற்ற முன்வருவோம், 100% வாக்களிப்பை உறுதி செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *