கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் பாக முகவர்களுக்கான கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாக முகவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது, இதேபோல் தில்லை நகர், உறையூர், காஜாமலை, உள்ளிட்ட பகுதிகளில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது..

இந்நிகழ்வில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், பகுதிச் செயலாளர் கமால் முஸ்தபா, மற்றும் வட்டச் செயலாளர்கள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *