சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் இருந்து இந்த ஆண்டு விடுதலை ஆகி வெளியே வந்த சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இனி தமிழக அரசியலில் நுழைய மாட்டார் என நினைத்த நிலையில், தொண்டர் ஒருவரிடம் சசிகலா நலம் குறித்து பேசிய போது அதில், கட்சியை சரிசெய்துவிடலாம் சீக்கிரம் வந்து விடுவேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் நிச்சயம் வருவேன். இப்போது கொரோனா தொற்று மோசமாக இருப்பதால் கவனமுடன் இருங்கள் என்று தொண்டருக்கு அறிவுறுத்துவது போன்ற ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. சசிகலா பேசுவது போன்ற இந்த ஆடியோ வால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *