கொரோனா நிவாரணமாக தனது தொகுதியில் நிவாரண பொருட்களை உதயநிதி வழங்கிய நிலையில் அதில் அவரது புகைப்படம் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் முழு ஊரடங்கு உள்ள நிலையில் சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பையை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்த பையில் உதயநிதி ஸ்டாலின் படம், திமுக கட்சி கொடி போன்றவை இடம்பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *