சர்வதேச 44-ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களைப் போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் மயிலாடுதுறையில் செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் “நேப்பியர் பிரிட்ஜ்” போன்று கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் தலைமையில், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் ஓவியர் ரஜினி பாஸ்கர், மாவட்ட செஸ் கழகச் செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகரின் பிரதான பகுதியான அரசு மருத்துவமனை சாலையில் உள்ள இந்த பாலம் புத்தெழில் பெற்று வருவதை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த வண்ணம் தீட்டும் பணிகள் நாளை முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *