திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையினால் சின்ன வெங்காயம் மிகவும் மோசமாகி பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்று கூறிய பிறகு இதுவரை நரசிங்கபுரம் விவசாயிகளுக்கு சின்ன வெங்காயத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை. கிடைக்க உத்தரவிட வேண்டி மனு அளித்தனர்.

முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்தில் விவசாயிகள் பயிர் செய்து மழையால் பாதிப்படைந்த சின்ன வெங்காயத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *