திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு செல்லும் பகுதியில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று இரவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார்.

இதில் பொதுச் செயலாளர் ரகுராமன்,பொரு ளாளர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *