நாளை மறுநாள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள் முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *