பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாநகர பகுதி சார்பாக நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் இந்திய விடுதலைப் போரின் ஷஹீத் சந்தா சாகிப் நினைவு அரங்கம் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி திருச்சி நர்தஷா பள்ளி வாசல் எதிரே நடைபெற்றது.

நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் சபியுல்லா கொடியேற்றினார். அதனை தொடர்ந்து இஸ்லாமிய வரலாற்று கண்காட்சியின் முக்கியத்துவத்தை சிறிய உரை மூலம் மக்களுக்கு மாவட்ட தலைவர் சபியுல்லா எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் அடுத்ததாக இஸ்லாமிய வரலாற்று கண்காட்சியை பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா திறந்து வைத்தார். மேலும் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி மூலம் பாபர் மசூதி வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்சல் கான் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, வடக்கு மாவட்ட பொது செயலாளர் நியாமத்துல்லா, மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் திருச்சி கிழக்குப் தொகுதி தலைவர் முஸ்தபா, மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ், நத்தர்வலி தர்கா அறங்காவலர் அல்லா பக்ஸ், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், மகள்ளாவாசிகள், வியாபாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள், ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *