சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் பாபு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. மேலும் இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள் சந்தேகமடைந்து உடனடியாக காவல் துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தை நிர்வாணமாக சடலத்துடன் இருப்பதும் அவரது மனைவி அருகில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வந்தது. கணவனின் சடலத்துடன் 2 நாள் இருந்த மனைவி குறித்த தகவல் புரசைவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *