பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் ஆட்டோ, மோட்டார் வாகனங்களுக்குFC மற்றும் லைசன்ஸ் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி யதை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை யொட்டி திருச்சி மாநகர் உறையூர் குறதெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் துரைராஜ் தலைமை ஏற்றார்.

நிர்வாகிகள் ரமேஷ், வெங்கடேசன், பாலசுப்பிரமணி, கௌரிசங்கர், பாலகிருஷ்ணன், நீதிபதி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர்க. சுரேஷ்MC , தலைவர் நடராஜா ஆட்டோ சங்க மாநகரத்தலைவர் சத்யா வங்கி யூனியன் நாராயணசாமி மாணவர் பெருமன்றம் இப்ராகிம் சட்ட ஆலோசகர் செல்வகுமார் எரிவாயு உருளை தொழிற்சங்க கௌரவ தலைவர் சுரேஷ் முத்துசாமி செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். 50 க்கும்மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கோஷமிட்டு பங்கேற்றனர். ஆட்டோ பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *