பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இன்று காலை திருவானைக்காவல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி, திருவோடு ஏந்தியும், சங்கு ஊதியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ், பகு தி தலைவர் சந்துரு, லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பகுதி குழு உறுப்பினர்கள் கண்ணன், வெங்கடேஷ், அருண், பிரசன்னா, விஜய், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அழகிரிபுரம் கிளை செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *