மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1346 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்த கடை சிக்னல் பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மாஸ்க் அணியாமலும், இருசக்கரத்தின் மீது நின்றபடி கூச்சலிட்டுக் கொண்டே பேரணியாக வந்தனர். இதனைக் கண்ட காவல் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த வாலிபர்களை இப்படி ஊரடங்கில் பொதுமக்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினால் உங்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தார். மேலும் அமைதியான முறையில் மாலை அணிவித்து செல்லும் படி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *