தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆரப்பட்டம் நடைபெற்றது. அதே போல திருச்சியில் பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே தமிழக இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, குட்கா, பான் மசால், போன்றவைகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் போதை பொருடகளை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது..

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார்,கிழக்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ்,தெற்கு மாவட்ட செயலாளர் திலிப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்