அகில இந்திய மூவெந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தின் மர்மங்களை வெளிப்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையுடன் காவல்துறை செயல்பட அனுமதி அளித்த முதல்வரை பாராட்டுவதோடு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும், பூலித்தேவர் விழாவிற்கு தமிழக முதல்வர் வருகை தந்து விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பாண்டியன், இணை பொதுச்செயலாளர்கள் நல்ல மணி, பிரபு, பொருளாளர் மணிவேல், தலைமை கழக செயலாளர் வேலுசாமி, இளைஞரணி செயலாளர் பெரிய துறை உள்பட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *