மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிஜேபியின் எம்பி பிரஜாத் பூசனை கைது செய்திட கோரி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

 போராட்டத்திற்கு DYFI மாவட்ட தலைவர் பா.லெனின், SFI மாவட்ட தலைவர் சூர்யா, மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் தலைமையில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்போடு இன்று காலை நடைபெற்றது.

போராட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது குண்டு கட்டாக போராட்டக்காரர்களை கைது செய்தனர் போராட்டத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டள்ளது, சிறு வயது குழந்தைக்கு பல் உடைபட்டுள்ளது 10 பெண்கள் 5 குழந்தைகள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *