மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌ மத்திய பல்கலைக்கழகங்களில்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பட்ட மேற்படிப்பு பயிலும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌. மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ / மாணவிகளின்‌ குடும்ப ஆண்டு வருமாணம்‌ ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல்‌ உள்ள மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர்‌ ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம்‌ ரூ.2 இலட்சம்‌ வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22ம்‌ கல்வியாண்டில்‌ புதியதாக (Fresh Application) விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான மாணவர்கள்‌ கீழ்கண்ட முகவரியிலுள்ள ‘இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்களை நேரில்‌ அணுகியோ அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல்‌ முகவரிக்கு விண்ணப்பம்‌ அனுப்பக்கோரி விண்ணப்பங்களைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

இயக்குநர் , பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் , எழிலகம் இணைப்பு கட்டடம் , 2 வது தளம் , சேப்பாக்கம் , சென்னை -5 . தொலைபேசி எண் . 044-28551462 மின்னஞ்சல் முகவரி . tngovtiitscholarship@gmail.com

மேலும்மேற்படி 2021-22ம்‌ நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள்‌ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. கல்வி நிறுவனங்கள்‌ தங்களது சான்றொப்பத்துடன்‌ தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021-க்குள்‌ அனுப்பி வைக்க வேண்டும்‌ என அரசு தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *