திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்ன மாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் அகற்றியப் போது தற்கொலை செய்துகொள்ள போவதாக வீட்டின் உரிமையாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவெறும்பூரை அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்ன மாவடி குளத்தில் 19 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்த 14 பேர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். இந்நிலையில் ஆர்டிஒ அலுவலகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி திருச்சி ஆர்டிஓ தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் கீழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் , ஜனநாயக சமூக நல கூட்டமைப்பினர் மற்றும் பொதுநல அமைப்பினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதி அன்று இது அரசு நிலம் என்று எச்சரிக்கை பலகை வைப்பது என்றும், வருகின்ற 04-01-2022 அன்றுஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டதன் காரணமாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கீழக்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சின்ன மாவடி குளத்தில், டிசம்பர் 21ம்தேதி இது அரசுக்கு சொந்தமான இடம் அத்துமீறி உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனவரி 4ம்தேதியான நேற்று வருவாய்துறையினர் திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் தலைமையில் சின்ன மாவட்ட குளத்தில் ஆக்கிரமித்து இருந்த பகுதிகள் அளந்து அளவு கல்களை நடவு செய்தனர்.பின்னர் ஆக்கிரமிப்பு பகுதியில் மாரிமுத்து என்பவர் போட்டிருந்த தகர செட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அப்புறப்படுதினார்கள்.அந்த பகுதியில் ஆக்கிரமித்து தாமஸ் என்பவர் கட்டி இருந்தமாடிவீட்டு எடுக்க முற்பட்டபோது தாமஸ் மருமகன் ஜார்ஜ் என்பவர் மூன்று நாள் அவகாசம் கேட்டுள்ளார் அதற்கு வருவாய்த்துறையினர் மறுத்ததை தொடர்ந்து ஜேசிபி எந்திரத்தின் முன்பு அமர்ந்து ஜார்ஜ் போராட்டம் செய்ததோடு தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் நாளை காலை 8 மணி வரை அவர்களுக்கு வருவாய்த் துறையினர்அவகாசம் கொடுத்துள்ளனர்.அப்போது திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா, ஜான் கென்னடி மற்றும் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, பொதுபணித்துறை சேர்ந்த அரசு ஊழியர் பலரும் உடன் இருந்தனர்.அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பிற்காக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் 20 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு இருந்த நீர் நிலைகளின் இடத்தை அகற்றியது இதுவே முதல் முறை என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *