கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருபவர் நாராயண பெருமாள் இவரது மனைவி ரத்தினம். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் கறிவேப்பிலையை பறித்த கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரத்தினத்தின் கை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அலறல் சத்தம் கேட்டு மொட்டை மாடிக்கு வந்த நாராயண பெருமாள் தரையில் பேச்சு மூச்சு இன்றி கிடந்த தனது மனைவி ரத்தினத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *