விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாண்புமிகு முதல்வர் அவர்களே, தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர். இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் பிள்ளையார் உங்களுக்குப் புரிய வைப்பார்.

 

தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள், மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பாரதிய ஜனதாக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *