திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல்ஸ் அக்குபஞ்சர் மையத்தில் திமுக கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.

திருச்சி உறையூர் தியாகராஜ நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ் அக்குபஞ்சர் மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன் வரவேற்றார். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் தமிழ் ஹெர்பல்ஸ் இயக்குனருமான டாக்டர். சுப்பையா பாண்டியன் தலைமை வகித்து ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள், மதிய உணவு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் தி.மு.க. உறையூர் பகுதி செயலாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் கபசுர குடிநீர், காய்ச்சல், சளி மற்றும் உடல் வலிக்கான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் உடல் வலி, கால் வலி உள்ள நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது

முகாமில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டி,, மன்னன், சிங்கம் விஜய், டாக்டர் ஷீலா தேவி, வசந்தம் அரிமா சங்க நிர்வாகி சுமதி பப்ளிகேஷன்ஸ் டி.ஜி.ஆர். வசந்தகுமார், ஜான். ராஜ்குமார், மதிகுமார், கணேசன், சகுந்தலா, சந்தானகிருஷ்ணன், சாய்ராம், செல்வகணபதி, மகாலட்சுமி பிரபாகரன், மற்றும் பரமசிவ தேவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முகாமில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டி,, மன்னன், சிங்கம் விஜய், டாக்டர் ஷீலா தேவி, வசந்தம் அரிமா சங்க நிர்வாகி சுமதி பப்ளிகேஷன்ஸ் டி.ஜி.ஆர். வசந்தகுமார், ஜான். ராஜ்குமார், மதிகுமார், கணேசன், சகுந்தலா, சந்தானகிருஷ்ணன், சாய்ராம், செல்வகணபதி, மகாலட்சுமி பிரபாகரன், மற்றும் பரமசிவ தேவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *