திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ( 03.06.2022 ) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெறவுள்ளது . இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் , விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம் , வேளாண்மை , இடுபொருட்கள் , வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் , விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ , மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் . விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *