திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை அருகே நெடுங்கூரில் இன்று காலை சாலையோரம் 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குரங்குகள் அனைத்தும் மந்தி வகையை சேர்ந்தது எனவும், மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்து வரும் இவ்வகை மந்திகளின் தொல்லை தாங்காமல்

 

யாரேனும் விஷமிகள் சிலர் இவைகளுக்கு விஷம் வைத்து கொன்று விட்டு சத்தமில்லாமல் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகப்படுகின்றனர். அல்லது விஷ காய், கனிகளை தின்றதால் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எனவே பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்