திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் கண்ட உரையாற்றினார் அதில்:- ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு என்று பாடல் வந்தது.ஆனால் யாருக்கு விடியல் தந்தாரு என்று இன்று வரை தெரியவில்லை. திருச்சி அமைச்சர் நடத்தும் Care School, College-ல் தமிழை எங்கு வளர்த்தனர். மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்தி திணிப்பு என்று திமுக கூறுகிறது. திருச்சி கொலை நகரமாக மாறிவிட்டது. காவல் துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளது.காவல் துறையினர் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் என்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *