108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன் புறப்பட்டு நேற்று அதிகாலை 4:44 மணிக்கு ரெங்கா ரெங்கா கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் பரமபத வாசலை கடந்தார். அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களின் விவரம். தெற்கு கோபுர வாசல் வழியாக வந்த 137507- பக்தர்களும், வடக்கு கோபுர வாசல் வழியாக 22710 பக்தர்கள் என மொத்தம் 160217 பக்தர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *