தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீபெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி மற்றும் கார்த்திகை கோபுரவாசல் ஆகிய மூன்று இடங்களில் தீ தடுப்பு கருவியான “நீர் தும்பி” அமைக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக கார்த்திகை கோபுர வாசல் அருகே நீர் தும்பி கருவி அமைக்கப்பட்டு , கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி ஆகியோர்‌ முன்னிலையில் கோயில் ஊழியர்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *