Month: January 2023

திருச்சியில் ரூபாய் 9 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 56 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

திருவெறும்பூர் எம் எல் ஏ அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன்,திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா…

திருச்சியில் பெண்கள், முதியவரை தாக்கி வழிப்பறி, கொள்ளை மர்ம நபர்கள் அட்டூழியம்.

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரதுமகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அந்தப் பெண்ணை தாக்கி கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் போலீஸ் கமிஷனர் சத்தியப் பிரியா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி முன்னிலை…

டெண்டர் விவகாரம் – மேயரிடம் திமுக கவுன்சிலர் கடும் வாக்கு வாதத்தால் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா மாற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து…

2-நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கான சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

திருச்சியில் இன்று மாலை பரவலாக பெய்த மழை.

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்  தற்பொழுது பரவலாக மழை…

இந்திய விமானப் படையில் பணிபுரிய நேர்காணல் – கலெக்டர் தகவல்.

இந்திய விமானப்படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளர் Airmen{Medical Assistant Trade) பணிக் காலியிடத்திற்கான “விமானப்படை ஆட்சேர்ப்பு பேரணி”(Walk-in-Interview) பிப்ரவரி 1 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பணி காலியிடத்திற்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும்…

20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் – தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்ட் எம்பிளாய் ஃபெடரேஷன் கோரிக்கை.

தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்ட் எம்பிளாய் ஃபெடரேஷன் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜோதி கண்ணன்,…

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்ம அனுபூதிக்கான பயணம் 3-ம் பாகம் நூல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் போதிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான தியான உத்திகள் கிரியா யோகம் மற்றும்  தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாகிய மூன்றாம் பாகம் ஆன்ம அனுபூதிக்கான…

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். – தலைமை ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநிலத்தலைவர் பொ.அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தலைவர் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலப்பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப்பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு…

லக்ஷணா ஃபேஷன் நிறுவனத்தின் அடுத்த மைல் கல்லாக லக்ஷணா யோகா ஸ்டுடியோ திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது

லக்ஷணா ஃபேஷன் நிறுவனத்தின் மணப்பெண் அலங்காரம், டைலரிங் கோர்ஸ், ஃபேஷன் ஸ்கோர்ஸ் ஆகியவற்றை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்த லக்ஷனா பேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் அனிதா டேவிட் அவர்களின் அடுத்த மைல் கல்லாக லக்ஷணா யோகா ஸ்டுடியோ திறப்பு விழா…

திருச்சி பன்னாட்டு விமான நிலைய த்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் – தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் அறவழிப் போராட்டம் அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை அறிவிக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள்…

மயக்கவியல் நுட்புநர் களுக்கான காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் – தமிழ்நாடு அரசு மயக்கவியல் நுட்புநர்கள்  நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு மயக்கவியல் நுட்புநர்கள்  நலச் சங்கத்தின் துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது . இந்த துவக்க விழாவிற்கு சங்கத் தலைவர் லெனின் பிரைட் தலைமை தாங்கினார் அம்பிகா வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் நோக்கத்தை பொதுசெயலாளர் செல்வராஜ் விளக்கினார் சாந்தக்குமார், மாநிலப்…

டிராக்டரில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் – நவீன சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய அப்போலோ மருத்துவர்கள்.

திருச்சி காட்டூர் பகுதியில் 33வயது பெண் மீது டிராக்டர் மேலேறி மிகுந்த விபத்துக்குள்ளான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார், விபத்துக்குள்ளான பெண்ணை அவசர சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் மற்றும் குழுவினர்கள்…

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி இன்று துவங்கியது.

திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் இரண்டு நாள் நடைபெறும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. புரவலர் ரவி தன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் திருச்சி ஹாக்கி அகாடமியின் தலைவர் பாலகிருஷ்ணன்,…