தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்மலை பகுதி அம்மன்நகர் வார்டு எண் 36 தொகுதி, 31வது வார்டு அந்தோணியார் கோயில் தெரு, காட்டூர் பகுதி 65வது வார்டு காந்திநகர் 7 வது தெரு ஆகிய பகுதிகளில்

அமைச்சர் அவர்களின் 2020 – 2021 நிதியாண்டின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 7,50,000 மதிப்பீட்டில் மோட்டாருடன் சின்டெக்ஸ் தொட்டி, ஆழ்துளாய் குழாயின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் பயன்பாட்டை பொதுமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், பகுதி கழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் வரதராஜன், முருகானந்தம், குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *