விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் கடந்த 1ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அந்த பகுதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் செல்போன் கடையில் 30000 பணம் உள்ளிட்ட 4 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போன வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்த நிலையில்

இன்று புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணப்பன் (21), விஜயகுமார், வெடிமுத்து (எ) ஆகாஷ் ( 22) மூன்று பேரையும் ஆரோவில் காவல் நிலைய போலிசார் கைது செய்து அவர்களை கொள்ளையடித்த விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளையும் போலிசார் மீட்டுள்ளனர்

மேலும் இந்த மூன்று கொள்ளையர்களும் புதுவை மாநிலம், அரியாங்குப்பம், கதிர்காமம், உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கடைகளில் கொள்ளை அடித்ததும் ஆரோவில் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்போன் கடையில் கொள்ளையர்கள் செல்போன்களை கொள்ளையடிக்கும் சிசிடிவி கட்சியும் போலீசாருக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *