தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து புங்கை, வேம்பு, மகாகணி, வசுந்தராணி, நாவல், மஹிலம் உள்ளிட்ட 9 வகையான மரக்கன்றுகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கிரண், மாநகராட்சி கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *