தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வருகிற 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு. 15-ம் தேதி புனித வெள்ளி அதனைத்தொடர்ந்து சனி , ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வருகிறது.

அதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக நாள்தோறும் 2500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக ஆயிரம் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *