கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து வாலிபர் செல்வமணி 25 என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து இன்று குற்றவாளி செல்வமணி என்பவருக்கு *ச/பி 366 IPC ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000/- அபராதமும், ச/பி 5(m) r/w 6(i) POCSO Act-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், ஆக (மொத்தம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்* என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜரானார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் உறுதுணயாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *