Author: JB

ஶ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பேட்டை, திம்மராய சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மேலும் நடுகொண்டையம் பேட்டை பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை…

வாரிசு படம் வெளியீடு – முதியோர் இல்லத்தில் பொங்கல் பரிசு வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து…

திரு நங்கைகள், நரிக் குறவர்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா – கலெக்டர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் இணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி…

துணிவு படம் வெளியீடு – அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.. 12 அடி உயரமுள்ள அஜித் பேனருக்கு பேப்பரால் ஆன மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும் மேளதாளம்…

திருச்சியில் மாதா கெபி இடிப்பு – பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெரம்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெரம்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70…

அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி 45 ஆவது வார்டு காருண்யா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் – திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி மரக்கடை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த…

ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.

எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், அரியலூர்,…

டெஸ்ட் பர்சேஸிற்கு வணிகர்கள் எதிர்ப்பு – ஸ்டிக்கர் ஒட்டிய தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பினர்.

தமிழக முழுவதும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸ்க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திருச்சி வெல்லமண்டி பழைய ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக ஓட்டினர். இந்த…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி நிகழ்ச்சி – பக்தர்கள் தரிசனம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி திருநெடுந்தண்டவத்துடன தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம்…

ஜல்லிக்கட்டு நேரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் – DYFI கோரிக்கை.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரத்தை இரண்டு மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின்,மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய மாநகராட்சி மேயர் அன்பழகன்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் முழு கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், புத்தூர் நால்ரோடு, ஆழ்வார்தோப்…

மாநில அளவிலான மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டிகள் – 250க்கு மேற்பட்டோர் பங்கேற்பு.

3வது மாநில அளவிலான மியூசிக்கல்ஸ் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் இன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை எஸ்.ஏ.எஸ்.கல்வி குழுமத்தின் இயக்குனர் முனைவர் செபாஸ்டின் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் செயலாளர் மெட்டில்டா, ஒருங்கிணைப்பாளர்…

லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மார்கழி திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம்…

6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற மாபெரும் வாக்-ரன் போட்டி

6 வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள், சித்த மருத்துவத்தை ஊக்குவிப்போம் உடல்நலத்தை காப்போம் என்ற கருப்பொருளை கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

தற்போதைய செய்திகள்