திருச்சியில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் திடீர் சாலை மறியல்.

திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ஆயிரத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு…

ரயில்வே தனியார் மயமாக்கப் படாது என பிரதமரும், மத்திய அமைச்சரும் கூறுவது பொய் – எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி.

எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீதர், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில்…

டாக்டர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் – திருச்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில்  திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை திமுகவினர் அமைதி ஊர்வலமாக…

கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் – கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி கருமண்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக கழக கொடியேற்று விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அணைக்கினங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பெட்டவாய்த்தலையில் இன்று காலை அதிமுக கழக கொடியேற்று…

திருச்சி ஆர்த்தோ மருத்துவ மனையில் காவலர் களுக்கு “உயிர் காக்கும் முதலுதவி” குறித்த பயிற்சி முகாம்.

எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் திருச்சி ஆர்த்தோ மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம்  திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள முகேஷ்…

திருச்சியில் கஞ்சா விற்ற தாய் கைது – மகன் தப்பி ஓட்டம்.

திருச்சி புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ளது தைலாகுளம் . இந்த தைலாக்குளம் தெருவினைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சேவாகி வயது 52 . இவர் மற்றும் இவரது மகன் கார்த்தி ஆகியோர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக கல்லக்குடி போலீசாருக்கு வந்த தகவலின்…

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் – அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தினர் தீர்மானம்.

அகில இந்திய மூவெந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தின்…

திருச்சி என்ஐடி கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா – 1977 மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் 18ஆவது பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி என்.ஐ.டி கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர்பட் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். இதில்…

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை சிறந்த சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.

கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய விஜயகுமார்( வயது 40) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 10ம் தேதி சேர்க்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்களில் பெரும்பகுதி வெந்து போயிருந்தது. உடலெங்கும் காயங்கள் இருந்தன. இடுப்பையும் கழுத்தையும் அசைக்க முடியாத நிலையில்…

அண்ணா மலையை பார்த்து எதிர் கட்சியினர் பயப்படு கிறார்கள் – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார். அவருக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை…

திருச்சியில் கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருச்சி துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார் – மேலும் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து துறையூர்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இரண்டு நாள் உணவு திருவிழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த…

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் திருச்சியில் மௌன அஞ்சலி ஊர்வலம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் திமுகவின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளான 07.08.2022…

திருச்சி அரசு மருத்துவ மனையில் 4-வது முறையாக மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

கரூர் மாவட்டம் , கிருஷ்ணராய புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 01.08.2022 அன்று சாலை விபத்தில் காயமுற்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்…