ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் 10000 கடந்த கொரோனா பாதிப்பு.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 9606 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1375 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

கேரள முதல்வருக்கு வாழ்த்து சொன்ன தமிழக முதல்வர்.

கேரளா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக…

மாணவர்களுக்கு அலகு தேர்வு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்தரைத்தளம், கடைகளில் கதவுகள் அமைக்கும் பணிகள்,சீலிங் அமைக்கும் பணிகள்…

திருச்சியில் பிரபல திருமண மண்டபம் கொரோனா மையமாக மாற்றம்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான இடம் பற்றாக்குறை காரணத்தினால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காவல்துறை, பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ராணுவ வீரர் உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்.

கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டி கிராமத்தினை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முத்துக்குமார் (33). இவர் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் ராணுவ பிரிவில் நாயக் பதவியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள இராணு மருத்துவமனையில்…

திருச்சியில் மீன் மார்க்கெட் மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.

திருச்சியில் இன்று கொரோனா நிலவரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8552 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 396 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் ஆம்புலன்ஸ்களை அலைக்கழிக்க விடும் காவல்துறை.

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு 15 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10-ம் தேதி முதல் அமல்படுத்தியது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு…

11 நாட்களுக்கு திருச்சியில் மீன் மார்க்கெட் கிடையாது.

திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.கொரோனாவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் நமது உயிர் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நம் நோக்கமல்ல . நமக்கும்…

மநீம கட்சியில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைத் தூக்கி விட்டது – முருகானந்தம் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும்,ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது.ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது.…

தகனம் செய்யும் பணியாளர்களுக்கு மரியாதை செய்த எம்எல்ஏ

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஓயாமாரி சுடுகாடு மற்றும் தகன மேடையை ஆய்வு செய்து பார்வையிட்டார்.மேலும் இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் இங்கு சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன . ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பாக…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன்முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே மாநில துணை செயலாளர் பாருக்தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.