திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத்தொடர்ந்து 100 முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்களை சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் மாநகராட்சி குப்பை, கழிவுகளை ஏற்றிச்செல்லும் வண்டியில் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் மாஸ்க் அணியுங்கள் என கூறி வரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர், அவர் நடத்தும் நிகழ்ச்சியில் இப்படி முன் களப்பணியாளர்களை சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் அணியாமலும் அழைத்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *