தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.

கோவை, சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.அதன் படி திருச்சி எடமலைப்பட்டி புதூர் இராமச்சந்திராநகர் பகுதியில் உள்ள அவரது சகோதரர் உதயகுமார் வீடு மற்றும் கிராப்பட்டி காந்திநகர் முதல் தெரு உள்ள அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் போலீசார் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்,ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *