திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்.

மதுரை,திருச்சி புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பழமையான பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. கட்டிடங்கள் இடிக்கப்படும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்த்து அமரவைத்து கல்வி பயில வழிவகை செய்ய உள்ளோம். திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது – அதனை இடித்து பின்னர் பணிகளை துவக்குவோம். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து குழுவாக பள்ளி கட்டிடங்களை இடிக்கும் இந்த பணியில் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் 75 கோடி ஒதுக்கினார்கள் – தற்போது 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். நெல்லை விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று – இந்த நிகழ்வு மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. இது அரசு பள்ளிக்கு மட்டுமல்ல தனியார் பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி எந்த பள்ளியாக இருந்தாலும் கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்வோம் .என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்