திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து பனமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்றபோது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே கணவன் ஜோசப் அவரது மனைவி ஆர்கனேஸ்மேரி இருவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்