துபாயிலிருந்து IX 618 விமானம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் வருகை கதவு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தனர். அங்கு விமான வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி சூரிய பிரகாஷை என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் வடிவத்திலான 555.000 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மை கொண்ட தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 26.29 லட்சம் எனவும் அதேபோல் மற்றொரு பயணியான கண்ணன் என்பவரை சோதனை செய்ததில் அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 697.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மை கொண்ட தங்க கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு. ரூ. 33.04 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பயணிகள் இருவரும் சுங்கச் சட்டம், 1962 ன் கீழ் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 1252.500 கிராம் கடத்தல் தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ. 59.33 லட்சம் திருச்சி விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தல் தங்கம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *