திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி பகுதியில் வசிப்பவர் சண்முகம். இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 12-ம் வகுப்பு படிக்கும் தனது அக்கா மகன் நந்தகுமாருடன் நாச்சி குறிச்சி அருகே உள்ள வக்கீல் தோட்டம் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது நந்தகுமார் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார் என கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற சண்முகம் முயற்சி செய்தபோது இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயற்ச்சித்தும் மீட்க முடியவில்லை. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பேரை உடலையும் ஆற்றில் இருந்து பிணமாக மீட்டனர்நீரில் மூழ்கி 12- வகுப்பு மாணவனும், தாய்மாமனும் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த +2 மாணவன் நந்தகுமார் அய்யம்பாளையத்தில் படித்து வருவதாகவும் , தற்போது விடுமுறை என்பதால் தனது தாய் மாமன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *