மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நவ்கான் அருகே டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் அழுகுரலை கேட்ட தாய் பதறித் துடித்தார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். மேலும் தலைமைச் செயல் அதிகாரி தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் குவாலியரில் இருந்து பேரிடர் மீட்பு குழு வரவேற்கப்பட்டது. ஆழ் துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்டெடுக்க மீட்பு குழுவினர் காவல்துறையினர் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி மூலம் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மீட்பு படையினர் குழந்தையை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *