இந்திய நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காந்தி மார்க்கெட் அருகே நடைபெற்றது. முன்னதாக நலத்திட்ட உதவிகள் பெற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்தில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட்டமாக சமூக இடைவெளியின்றி முண்டியடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெற முண்டியடித்துக் கொண்டு சென்றதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் திருச்சி மாவட்டத்தில் குறைந்து வரும் நிலையில் இதுபோன்று முன்னேற்பாடுகள் இன்றி கூட்டம் கூட்டுவது கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்