கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி இ.பி ரோட்டில் உள்ள பூலோக நாதர் திருக்கோவில் முன்பாக இந்து முன்னனியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து உடல் நலனை கெடுக்கும் மது விற்பனையை திறந்துவிட்ட அரசு, மன வலிமையை தரும் தெய்வ வழிபாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *