உலக இருதய தினம் செப்டம்பர் 29ம் தேதி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உலக இருதய தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீம் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பலூன்களை பறக்கவிட்டு மனித இருதயத்தை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஏற்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இருதயத்தை பாதுகாத்திட வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆரோக்கியமான இருதயத்திற்கான சுகாதாரக் கல்வி குறித்த சுவரொட்டிகள் திறந்து வைக்கப்பட்டன. நல்ல இருதயத்திற்கான ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை இயற்றும் வகையில் மாணவர்களால் நாடகம் நடைபெற்றது.

மேலும் சிறப்பாக செய்யப்பட்ட நல்ல சுவரொட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த இருதய தின கொண்டாட்டத்தில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பயிற்சி பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்