நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்

வேட்பாளர்களாக போட்டியிடும் கட்சியினர் தங்களின் விருப்ப மனுவை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதியிடம் இன்று வழங்கினார்.

அருகில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி கு ப கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு, இந்திரா காந்தி மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர் பகுதி கழக செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *