தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளராகவும், இருப்பவர் கே.என் நேரு இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி பகுதியாகும். இதேபோல் லால்குடி தொகுதியில் திமுகவை சேர்ந்த சௌந்தர பாண்டியன் என்பவர் கடந்த நான்கு முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகுத்து வருகிறார். அமைச்சர் கே.என் நேரு மற்றும் எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் ஆகியோரின் பெயர்கள் மற்றும் படங்களை வைத்து கொண்டு லால்குடி பகுதியில் பல்வேறு தொழில்களை செய்து வருபவர் திமுக பிரமுகர் வெங்கடேஷ் இவர் லால்குடி பகுதியில் 4 மதுபான கடைகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை 9ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ஜூலை 7-ம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 9-ம் தேதி இரவு 12 மணி வரையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் முத்தையம் பாளையம், சாத்தமங்கலம், லால்குடி, மணக்கால், புத்தாநத்தம், கருமலை, தீராம்பாளையம், திருப்பஞ்சலி, பூனாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கவும்.

இதே போல் ஜூலை 12-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் துறையூர், லால்குடி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மது கூடங்கள் மற்றும் FL2 முதல் FL11 (FL-6தவிர) வரையிலான உரிமத்தளத்தில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நான்கு நாட்கள் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி கடைகள் மதுபான கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சந்து கடை முதலான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளார்.

திருச்சி டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் மாலதி, மாவட்ட மேலாளர் சக்திவேல்.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறி லால்குடி ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள மதுபான கடை எண் 10339 மற்றும் 10340 ஆகிய கடைகளில் காலை முதலே கள்ள சரக்கான பாட்டில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் சரக்கு பாட்டில் வாங்க வருபவர்களிடம் 200 முதல் 1000 ரூபாய் வரை அதிக பணம் வசூலிக்கப்பட்டு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக அரசு அதிகாரிகளான திருச்சி டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் மாலதி மற்றும் மாவட்ட மேலாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்ளாததால்  மற்ற நாட்களிலும் கூட 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை படுஜோராக விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குமுரி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம் முழுவதும் மதுபான கடைகளில் விற்பனை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *