திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கதுறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து சர்வாதிகார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற மத்திய பிஜேபி அரசை கண்டித்து திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் சத்யாகிரக போராட்டம் இன்று நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ் திருச்சி வேலுச்சாமி கள்ளிக்குடி சுந்தரம் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன் பேட்ரிக் ராஜ்குமார் ராஜலிங்கம் கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜோசப்ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் மற்றும் விக்டர், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *